என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்க தயாராக இருக்கிறேன்… ராகுல் காந்தி டுவிட்டரில் பதிவு
புதுடெல்லி: 2019 தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை அவதூறாகப் பேசியது தொடர்பான அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
இந்த வழக்கில் ராகுல் காந்திக்கும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. சூரத் செஷன்ஸ் நீதிமன்றம், ராகுல் காந்தியின் தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்தது, நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ள நிலையில், தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, எம்.பி. ராகுல் காந்தியை அப்பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்வதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “இந்தியாவின் குரலுக்காக நான் போராடுகிறேன். என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்க தயாராக இருக்கிறேன்” என்று இந்தியில் கூறியுள்ளார்.