
பிக்பாஸ் 17வது சீசனில் கலந்து கொண்ட நடிகை சோனியா பன்சால் சினிமாவை விட்டு விலகியுள்ளார். இவர் ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்ததுடன், இசை வீடியோக்களிலும் பணியாற்றியுள்ளார். ஆக்ரா பகுதியைச் சேர்ந்த இவர், சல்மான் கான் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் 13வது நாளே வெளியேற்றப்பட்டார்.சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசும் போது சோனியா கூறியதாவது, “என்னிடம் பணமும் புகழும் இருந்தன. ஆனால் நிம்மதி இல்லை.
வாழ்க்கையில் மன நிம்மதி தான் முக்கியம் என்பதில் எனக்கு தற்போது தெளிவாகியுள்ளது. பெர்ஃபக்டாக இருக்கவேண்டும் என்ற ஓட்டத்தில் நான் என்னை நான் இழந்துவிட்டேன்” என்றார்.இனிமேல் நடிகையாக இல்லை, ஆன்மீக பாதையில் பயணிக்கிறார் எனத் தெரிவித்த சோனியா, லைஃப் கோச்சாக இருப்பதற்குத் திட்டமிட்டுள்ளார். சினிமா துறையில் இருந்தபோதும் அமைதியின்றி வாழ்ந்ததை நினைத்து வருத்தப்படுகிறார்.
இப்போது உண்மையான வாழ்வை வாழ விரும்புகிறார். மரணம் எப்போது வரும் என்று தெரியாத வாழ்க்கையில் உண்மையாக வாழ வேண்டும் என்பதே அவரது புதிய நோக்கம். புகழை விட்டுவிட்டு மன அமைதிக்காக வாழத் தீர்மானித்துள்ளார்.சோனியாவின் இந்த முடிவை ரசிகர்கள் வரவேற்றுள்ளனர். “உங்களுக்குப் பிடித்ததைச் செய்யுங்கள். சந்தோஷமாக இருங்கள்” என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சோனியாவின் சமூக வலைதளங்களில் ஆன்மீக சார்ந்த பதிவுகள் அதிகரித்து வருகின்றன. சினிமாவை விட்டு விலகும் நடிகைகளின் பட்டியலில் சோனியா பெயரும் சேர்கிறது.தற்போதைய சூழ்நிலையில் பலரும் மன அமைதி தேடி ஆன்மீகத்தையே தேர்வு செய்கின்றனர். சோனியாவின் முடிவு அந்த வழியை பிரதிபலிக்கிறது.