தேனி பரமசிவன் மலைக்கோவில் சித்திரை திருவிழா கோலாகல தொடக்கம்
தேனி: தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் தெற்கு திருவண்ணாமலை என போற்றப்படும் அருள்மிகு பரமசிவன் மலைக்கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தேனி மாவட்டம் போதிநாயக்கனூரில் இருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் பரமசிவன் மலைக்கோயில் அமைந்துள்ளது. தெற்கு திருவண்ணாமலை என்று போற்றப்படும் இந்த 500 ஆண்டுகள் பழமையான கோவில் போடிநாயக்கனூரை ஆண்ட ஜமீன்களால் கட்டப்பட்டு தற்போது இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
அதன்படி, இந்த ஆண்டும் பாரம்பரிய முறைப்படி ஜமீன்தார் வம்சாவளியான வடமலை முத்து சீலராஜா பாண்டியர் தலைமையில் பழமை வாய்ந்த பெரியாண்டவர் திருக்கோயிலில் கொடிமரம் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து போடி நகர முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மலை உச்சியில் அமைந்துள்ள கோயில் முன்பாக கொடியேற்றம் செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் போடிநாயக்கனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள், வியாபாரிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோயில் செயல் அலுவலர் மாரிமுத்து உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.