May 18, 2024

படப்பை அருகே குடிநீர் குழாய் உடைந்து சாலை சேதம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் முக்கிய சாலையாக வண்டலூர்-வாலாஜாபாத் 6 வழிச்சாலை உள்ளது. இந்த சாலை வழியாக தினமும் அரசு பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்த 6 வழிச்சாலைக்கு கீழே பாலாறு குடிநீர் குழாய் செல்கிறது. இந்நிலையில் படப்பை அடுத்த பகுதியில் பாலாறு குடிநீர் குழாய் சேதமடைந்து குடிநீர் கசிந்து வருகிறது. இதனால் சாலையின் நடுவில் பள்ளம் ஏற்பட்டு தண்ணீர் தேங்கி நிற்கிறது.

இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளங்களில் விழுகின்றனர். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!