May 17, 2024

மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தங்கம் கடத்த முற்பட்ட வாலிபர் கைது

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.86 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் இளைஞர் கைது செய்யப்பட்டார் சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.86 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை ஆலந்தூரில் உள்ள மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்திற்கு அதிக அளவில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, ​​துபாயில் இருந்து விமானத்தில் வந்த சென்னையைச் சேர்ந்த வாலிபரை நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னும் பின்னும் முரன்பட்டார்

அதன்பின், சுங்கத்துறை அதிகாரிகள் உடமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லாததால், தனியறைக்கு கொண்டு சென்று சோதனை செய்தனர். அப்போது பேண்டில் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த 3 தங்கச் சங்கிலிகளும், இருப்பதைக் கண்டனர்.

ரூ. 86 லட்சத்து 27 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 774 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், வாலிபரை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள், கடத்தலில் பின்னனியில் உள்ளவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!