தாய்ப்பால் அதிகம் சுரக்க தாய்மார்கள் இதை செய்யது பாருங்கள்
குழந்தை பிறந்தவுடன் தாய் பால் கொடுப்பது மிகவும் அவசியம் என்பதும், தாய்ப்பாலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்திதான் அந்த குழந்தைக்கு கடைசிவரை காப்பாற்றும் என்பது மருத்துவர்களின் அறிவுரையாக இருந்து வருகிறது.
ஒரு சிலர் ஓரிரு மாதங்கள் மட்டும் தாய்ப்பால் கொடுத்துவிட்டு அதன் பிறகு புட்டி பால் கொடுப்பது தான் இன்றைய நோய் அதிகரிக்க காரணம் என்றும் கூறப்படுகிறது.
குறைந்தது இரண்டு ஆண்டுகள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்பதே நமது முன்னோர்களின் அறிவுரையாக இருந்தது. இந்த நிலையில் பிரசவத்துக்கு பின் தாய்ப்பால் அதிகம் சுரக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.
முருங்கைக்கீரை அதிகம் சாப்பிட்டால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும் என்றும் அதேபோன்று காய்கறிகள் பழங்களை தினமும் தாய்மார்கள் சாப்பிட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது