வாடிகன்: கத்தோலிக்க மத தலைவரான போப் பிரான்சிஸ் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் அவர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
கத்தோலிக்க மதத் தலைவரான போப் பிரான்சிஸ் இன்று ஹாஸ்பிடலில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. நிமோனியாவால் பாதிக்கப்பட்ட போப் பிரான்சிஸூக்கு ஒரு மாதத்திற்கு மேலாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து, டிஸ்சார்ஜ் செய்யப்படவுள்ளார். எனினும் 2 மாதங்களுக்கு அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
போப் பிரான்சிஸ் உடல்நலம் தேடிவர வேண்டும் என வாடிகனில் சிறப்பு பிரார்த்தனைகளும் நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.