இஸ்ரேல்: காஸா போரை நிறுத்த இஸ்ரேல் பிரதமர் நேதன்யாஹு மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
காஸா மீதான மூர்க்கத்தனமான தாக்குதலை நிறுத்தாவிட்டால் இஸ்ரேல் கடும் எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடும் என அதன் நட்பு நாடுகளான பிரிட்டன், பிரான்ஸ், கனடா எச்சரிக்கை விடுத்துள்ளன.
இது குறித்து 3 நாடுகளின் தலைவர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், நிவாரண பொருட்கள் இஸ்ரேல் ராணுவம் காஸாவுக்குள் அனுமதிக்காததால் மக்கள் எதிர்கொள்ளும் துயரங்களை சகித்துக்கொள்ள முடியவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.
போரை நிறுத்துவது ஹமாஸுக்கு கிடைக்கும் மிகப் பெரிய பரிசாக அமையும் என விமர்சித்துள்ள இஸ்ரேல் பிரதமர் நேதன்யாஹு, அமெரிக்க அதிபர் டிரம்பை பின்பற்றி இஸ்ரேலுடன் துணை நிற்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
காஸாவை முழுவதுமாக இஸ்ரேலின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வரப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.