ஹைதராபாத்: சமந்தாவும் நாக சைதன்யாவும் இணைந்து நடித்த முதல் தெலுங்கு படம் ‘யே மாயா சேசாவே’. இதன் பிறகு, ‘மனம்’ படத்தில் இணைந்து நடித்தனர். அந்த நேரத்தில், இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து 2017-ல் திருமணம் செய்து கொண்டனர். சில ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்கள் விவாகரத்து செய்து பிரிந்தனர்.
விவாகரத்துக்குப் பிறகு, நாக சைதன்யா நடிகை சோபிதாவை காதலித்து இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டார். இந்த சூழ்நிலையில், சமந்தாவும் நாக சைதன்யாவும் இணைந்து நடித்த முதல் படமான ‘யே மாயா சேசாவே’ 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளியிடப்பட உள்ளது.

‘யே மாயா சேசாவே’ படம் ஜூலை 18 அன்று மீண்டும் வெளியிடப்பட உள்ளது. இந்த சூழ்நிலையில், படத்தை விளம்பரப்படுத்த சமந்தாவும் நாக சைதன்யாவும் இணைந்து விளம்பர நிகழ்வுகளில் பங்கேற்பதாக செய்திகள் வந்தன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சமந்தா, “இல்லை, நான் யாருடனும் ‘யே மாயா சேசாவே’ படத்தின் விளம்பரத்தில் பங்கேற்கப் போவதில்லை.
அந்தப் படத்தை விளம்பரப்படுத்தவும் எனக்கு விருப்பமில்லை. இந்தப் பேச்சு எங்கிருந்து வருகிறது என்று எனக்குத் தெரியவில்லை. தயவுசெய்து தேவையற்ற வதந்திகளைப் பரப்பாதீர்கள்” என்று பதிலளித்துள்ளார்.