கொழும்பு: இலங்கையில் அனைத்து வசதிகளுடன் கூடிய திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழாவில் தென்னிந்திய திரைப்பட இயக்குனர் அமீர், லப்பர் பந்து கதாநாயகிகள் சுவாசிகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, எழுத்தாளர் பாவா செல்லத்துரை மற்றும் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். ஒரு படத்திற்கான அனைத்து நவீன தொழில்நுட்ப வசதிகளும் இந்த நிறுவனத்தில் உள்ளன.
DI, எடிட்டிங், அட்மாஸ் சவுண்ட், மிக்ஸிங் பிரிவியூ தியேட்டர், ஃபோலி சவுண்ட்ஸ், டப்பிங் தியேட்டர் போன்ற வசதிகளுடன் கூடிய படப்பிடிப்புக்குப் பிந்தைய பணிகளுக்கான தொழில்நுட்ப அறை மற்றும் ஸ்டுடியோ உள்ளது. இந்த ஆண்டுக்கான 5 முழு நீள திரைப்படங்களை தயாரிப்பதற்கான ஆரம்ப நிகழ்வும் நடைபெற்றது.

இலங்கையின் முன்னணி திரைப்படக் கலைஞர்கள், இலங்கை திரைப்பட சங்கத் தலைவர் சுடத் மகாடிவுலுவேவா, யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா அமைப்பாளர் அனோமா ராஜகருநாயக்க ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். ஸ்ரீஸ்கந்தராஜா ட்ரீம் லைன் நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார்.
இதன் மூலம் அவர் படங்களைத் தயாரிப்பார். இந்த விழாவில், லூயிஸ், அந்தோணி, மிஷன் லங்கா, சசுவதம், திரவி போன்ற திரைப்படப் பெயர்களை அறிமுகப்படுத்தி இயக்குநர்கள் கௌரவிக்கப்பட்டனர்.