புது டெல்லி: மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஆகஸ்ட் 21-ம் தேதி ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்திய பொருட்களுக்கு 50% வரி விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
இது இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகளில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழ்நிலையில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷ்யாவிற்கு விஜயம் செய்துள்ளார். அங்கு அவர் ஜனாதிபதி புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அஜித் தோவல், “ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வர விருப்பம் தெரிவித்துள்ளார். இது மிகுந்த மகிழ்ச்சிக்குரிய விஷயம்” என்றார். இந்த சூழலில், மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் 21-ம் தேதி ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அங்கு அவர் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.