சென்னை: திருவான்மியூர், பாலவாக்கம், உத்தண்டி, குலசேகரப்பட்டினம், கீழ்புதுப்பட்டு மற்றும் சாமியார்பேட்டை ஆகிய 6 கடற்கரைகளுக்கு நீலக் கொடி சான்றிதழ் திட்டத்திற்கான பணிகளை மேற்கொள்ள ரூ. 24 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக, தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:-
2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் உரையின் போது, சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தூத்துக்குடி மாவட்டத்தில் திருவான்மியூர், பாலவாக்கம், உத்தண்டி, குலசேகரப்பட்டினம், விழுப்புரம் மாவட்டத்தில் கீழ்புதுப்பட்டு, கடலூர் மாவட்டத்தில் சாமியார்பேட்டை ஆகிய 6 கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

தூய்மை, பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பராமரிப்பு மற்றும் நிலைத்தன்மை போன்ற சர்வதேச தரங்களை பூர்த்தி செய்யும் கடற்கரைகளுக்கு மட்டுமே தற்போது இந்த சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இது தொடர்பாக, கடல் நீரின் தரம், சுற்றுச்சூழல் கல்வி, சுற்றுச்சூழல் மேலாண்மை, பாதுகாப்பு மற்றும் சேவைகள் போன்ற 33 வெவ்வேறு விதிகளை நிறைவேற்றி நீலக்கொடி சான்றிதழ் பெற நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக ரூ.24 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.