சென்னை: இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டது: வடமேற்கு வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து நேற்று அதிகாலை 5.30 மணிக்கு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, வடக்கு சத்தீஸ்கர் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளை பாதித்தது.
இதனிடையே, மேற்கு திசை காற்றின் வேகத்தில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக, இன்று முதல் செப்டம்பர் 7-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 8 ஆம் தேதி ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் சில இடங்களில் இன்று அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும். சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வெப்பநிலை 27 டிகிரி முதல் 35 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.
தமிழ்நாட்டில், நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழைப்பொழிவு நீலகிரி மாவட்டம், பார்வுட், விண்ட்வொர்த் எஸ்டேட் மற்றும் மதுரை மாவட்டம், தனியாமங்கலத்தில் பதிவாகியுள்ளது. மதுரை விமான நிலையத்தில் வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.