ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள புகழ்பெற்ற தால் ஏரியின் வடக்குக் கரையில் ஹஸ்ரத்பால் மசூதி அமைந்துள்ளது. இது ஜம்மு-காஷ்மீர் முஸ்லிம் வக்ஃப் வாரியத்தால் நிர்வகிக்கப்படுகிறது.
இந்த மசூதி புதுப்பிக்கப்பட்டு தேசிய சின்னத்துடன் கூடிய திறப்பு விழா பலகை நிறுவப்பட்டது. நேற்று முன்தினம் அடையாளம் தெரியாத நபர்களால் இது சேதப்படுத்தப்பட்டது. மசூதியில் தேசிய சின்னம் சேதப்படுத்தப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

அதே நேரத்தில், ஒரு மத வழிபாட்டுத் தலத்தில் தேசிய சின்னத்தை பொறிக்க வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி எழுகிறது. வேறு எந்த மத வழிபாட்டுத் தலத்திலும் இதுபோன்ற சின்னம் பொறிக்கப்பட்டிருப்பதை நான் பார்த்ததில்லை.
கோயில்கள், மசூதிகள் மற்றும் குருத்வாராக்கள் அரசு நிறுவனங்கள் அல்ல, மத வழிபாட்டுத் தலங்கள் அல்ல என்றார்.