புதுச்சேரி: புதுச்சேரி மாநில சட்டமன்ற தேர்தலை ஒட்டி காரைக்காலில் 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களிடம் தபால் வாக்குகளை சேகரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, காரைக்காலில் 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களிடம் தபால் வாக்குகளை சேகரிக்கும் பணி தொடங்கியது. நாளை வரையில் தபால் வாக்குகளை சேகரிக்கும் பணி நடைபெறும் என தேர்தல் அலுவலர்கள் அறிவித்துள்ளனர்.