காய்கறிகள் வரத்து குறைவால் உயர்ந்தது விலை
சென்னை: கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை 10 சதவீதம் உயர்ந்துள்ளது. தண்ணீர் தட்டுப்பாட்டால் ஆந்திராவில் காய்கறி உற்பத்தி குறைந்து விட்டது. இதனால் பீன்ஸ், அவரைக்காய், கேரட் ஆகிய காய்கறிகளின் வரத்து வெகுவாக குறைந்து விட்டதால் அதன் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.