தென்காசி: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது பரவலாக பெய்து வருகிறது. இதன்படி நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழையால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் பழைய குற்றாலத்தின் முக்கிய அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. நேற்று 4-வது நாளாக தடை நீடித்தது. ஆனால், இந்த அருவிகளுக்கு வந்த சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில், 3 நாட்களுக்கு பிறகு தற்போது குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன்படி பிரதான அருவி, ஐந்தருவி, சிற்றருவியில் தண்ணீர் வரத்து சீராக சரிந்துள்ளதால், சுற்றுலா பயணிகளும், ஐயப்ப பக்தர்களும் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர்.