மேட்டூர்: காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும். இந்நிலையில் நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 7,148 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 7,368 கன அடியாக அதிகரித்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 1,000 கன அடி தண்ணீரும், கால்வாய் பாசனத்துக்கு 300 கன அடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது.

அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் நேற்று 118.53 அடியாகவும், நீர் இருப்பு 91.46 டிஎம்சியாகவும் இருந்தது. தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த 13-ம் தேதி காலை வினாடிக்கு 7,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, 14-ம் தேதி காலை 8,000 கன அடியாக அதிகரித்தது. நேற்று வரை தண்ணீர் வரத்து மாறாமல் 8,000 கன அடியாக இருந்தது.