By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஈரான் மீது அமெரிக்க அதிரடி நடக்குமா? டிரம்ப் விரைவில் தீர்மானம்
    1 Min Read
    ஈரான் இஸ்ரேலிய மருத்துவமனை மீது தாக்குதல்: நெதன்யாகு எச்சரிக்கை..!!
    2 Min Read
    மீண்டும் வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா நடைமுறையை தொடங்கிய அமெரிக்கா ..!!
    1 Min Read
    இஸ்ரேல் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஈரானில் இருந்து மிரட்டல்
    2 Min Read
    ஈரானில் இஸ்ரேல் தாக்குதல்: இந்திய மாணவர்கள் காயம், தணிக்கையற்ற தாக்குதலுக்கு கண்டனம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    ஜி7 உச்சிமாநாட்டில் மோடி வழங்கிய பாரம்பரிய பரிசுகள்
    1 Min Read
    ராகுலுக்கு புதிய அரசினர் பங்களா: சுனேரி பாக் இல்லத்திற்கு குடிபெயர்வு உறுதி
    1 Min Read
    சுபான்ஷூ சுக்லா குழுவின் விண்வெளிப் பயணம் மீண்டும் தடை:
    1 Min Read
    தடை செய்யப்பட்ட கிளஸ்டர் ஏவுகணையால் ஈரான் தாக்குதல்: இஸ்ரேலில் அதிர்ச்சி நிலை
    1 Min Read
    எரிசக்தி சந்தை சீராக உள்ளது: மத்திய பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி
    2 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    ஒகேனக்கல்லை அடைந்த கர்நாடக நீர்: வெள்ளப்பெருக்கு காரணமாக அருவிகளில் குளிக்க தடை
    1 Min Read
    டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு அதிகரிப்பு..!!
    1 Min Read
    நித்யானந்தா எங்கே இருக்கிறார்? பெண் சீடர் உயர் நீதிமன்றத்தில் தகவல்
    1 Min Read
    என் மீது திட்டமிட்ட தாக்குதல்: அஸ்வத்தாமன் குற்றச்சாட்டு..!!
    2 Min Read
    ராமதாஸ் மீண்டும் போராட்டக் களத்தில் இறங்க துரை. ரவிக்குமார் வலியுறுத்தல்.!!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: சம்பா அறுவடைப்பணிகளில் தீவிரம் காட்டும் விவசாயிகள்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > விவசாயம் > சம்பா அறுவடைப்பணிகளில் தீவிரம் காட்டும் விவசாயிகள்
விவசாயம்

சம்பா அறுவடைப்பணிகளில் தீவிரம் காட்டும் விவசாயிகள்

Nagaraj
Last updated: January 28, 2025 12:14 pm
By Nagaraj 3 Min Read
Share
SHARE

தஞ்சாவூர்: தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மேலும் கோடைகால சாகுபடியும் நடைபெறும். டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடிதான் முக்கியமானதாகும்.

ஒரு சில பகுதிகளில் கரும்பு சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. மேலும் கடலை, உளுந்து, பயறு, சோளம், பூக்கள், காய்கறிகள், கிழங்குகள் போன்றவற்றையும் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

பம்ப் செட் வசதியுள்ள சில பகுதிகளில் விவசாயிகள் கோடை நெல் சாகுபடியும் மேற்கொள்வது வழக்கம். கரும்பு, நிலக்கடலை, உளுந்து, சோளம் என்று பயிரிடப்பட்டாலும் அதிக பரப்பளவில் நெல் சாகுபடியைதான் விவசாயிகள் மேற்கொள்கின்றனர். தஞ்சை மாவட்டத்தில் சம்பா சாகுபடி செய்ய 3.20 லட்சம் ஏக்கர் நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த வகையில் தஞ்சை மாவட்டம் முழுவதம் சுமார் 3.19 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி நடைபெற்றது.

தற்போது சம்பா சாகுபடிக்காக அறுவடை பணிகள் மும்ழுரமாக நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் மற்றும் கடந்த வாரம் பெய்த மழையால் சம்பா பயிர்கள் வயலில் சாய்ந்து பாதிக்கப்பட்டன. மேலும் கடும் பனிப்பொழிவு இருப்பதால் நெல்கள் அனைத்தும் அறுவடை செய்ய முடியாத நிலையில் சாய்ந்து உள்ளது. இதே நிலை நீடித்தால் வயலில் சாய்ந்து கிடக்கும் நெல் முளைக்க ஆரம்பித்து விடும் என்று விவசாயிகள் கவலையில் உள்ளது. இதற்கிடையில் தஞ்சாவூர் மாவட்டம் 8 நம்பர் கரம்பை, ஆலக்குடி, கல்விராயன்பேட்டை, சித்திரக்குடி பகுதிகளில் நெல்பழம் மற்றும் புகையான் நோய் தாக்குதலும் ஏற்பட்டுள்ளது.

காலை மற்றும் இரவு நேரத்தில் அதிகளவு பனிப்பொழிவு இருப்பதால் நெல் ஈரப்பதம் அதிக அளவில் உள்ளது. இந்த நிலையில் அறுவடை செய்த நெல்லை விவசாயிகள் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் முன்பு கொட்டி காய வைக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே மருவத்தூர் பகுதியில் சம்பா சாகுபடி அறுவடை பணிகளில் விவசாயிகள் மும்முரம் காட்டி வருகின்றனர். அறுவடை இயந்திரங்கள் பற்றாக்குறை காரணமாக நாமக்கல், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், பெரம்பலூர், சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அறுவடை இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. அறுவடை இயந்திரம் ஒரு மணி நேரத்திற்கு ரூ.2500 வரை வசூலிக்கப்படுகிறது. அறுவடை இயந்திரம் பற்றாக்குறை காரணமாக வெளி மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்டு அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் கூறியதாவது: பனிப்பொழிவும் அதிகமாக இருக்கிறது. இதனால் நன்கு முற்றிய நெல் கதிர்களை அறுவடை செய்து உலர்த்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளோம். இல்லாவிட்டால் பனியால் நெல் பாதிக்கப்படும். அறுவடை இயந்திரம் வௌி மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்டு இறுவடை செய்து வருகிறோம். இன்னும் காலம் தாழ்த்திலாம் அறுவடை செய்வதில் பிரச்சனை ஏற்படும். இந்த மாத இறுதியில் மீண்டும் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. அதனால் தற்போது அறுவடையை தொடங்கியுள்ளோம். அறுவடை செய்த நெல்லை காய வைத்து பின்பு தான் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து வருகிறோம். அறுவடை செய்யும் போது வயல்கள் ஈரமாக இருப்பதால் இயந்திரம் மூலம் அறுவடை செய்வதில் சவாலாக உள்ளது.

41 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை நெல்லை அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் ரூ.900க்கு வாங்கிக் கொள்கிறார்கள். வைக்கோல்கள் விற்பனை செய்வதிலும் பிரச்சனை உள்ளது. ஒரு கட்டு வைக்கோல் ரூ.40க்கு தான் விற்க முடிகிறது. மேலும் இந்த ஆண்டு மழை அதிக அளவில் பெய்ததில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

You Might Also Like

ப்ரீடம் படத்தின் அவுட்டோர் ப்ரொமோஷன் பணிகள்… வெகு மும்முரம்

அதிக மகசூல் காரணமாக திருப்பதியில் பிற மாநிலங்களிலிருந்து மாம்பழங்களை வாங்க முடியாது..!!

மகளிர் உரிமைத்தொகை பெற தவறியவர்கள் விண்ணப்பிக்கலாம்: மு.க. ஸ்டாலின் உரை

விவசாயிகளின் கஷ்டங்களை முதல்வர் உணரவில்லை: இபிஎஸ் விமர்சனம்

சித்தூர் மாவட்டத்தில் வணிகர்களுக்கு மாம்பழங்கள் நேரடி விற்பனை..!!

TAGGED:BusyfarmersharvestMaruvathurSamba Cultivationஅறுவடைசம்பா சாகுபடிமருவத்தூர்மும்முரம்விவசாயிகள்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
சினிமா

நடிகர் ஸ்ரீ பற்றி எந்த தகவலும் வெளியிடப்படாத நிலையில் புதிய நாவல் எழுதியுள்ளதாகப் பகிர்வு..!!

By Periyasamy 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?