பெங்களூரு: கர்நாடகாவின் தற்போதைய கடன் நிலை 6.65 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளதாக, எதிர்க்கட்சித் தலைவர் அசோக் கூறியுள்ளார். அவர் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் வெளியிட்ட பதிவில், காங்கிரஸ் அரசு கர்நாடகாவை திவாலாக்குவதாகவும், முதல்வர் சித்தராமையா கடன் வாங்குவதை தனது முழுநேர வேலையாக மாற்றியுள்ளதாக கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.
அசோக் மேலும் கூறியுள்ளார், “ஊழல் நிறைந்த காங்கிரஸ் அரசு ஒவ்வொரு கன்னடரின் தலையிலும் 1 லட்சம் ரூபாய் கடனை சுமத்தி உள்ளது.” பா.ஜ., ஆட்சியின்போது மாநிலம் புதுமை குறியீடு மற்றும் மூலதன முதலீட்டில் முன்னணி இடத்தில் இருந்ததாகவும், தற்போது அதிக கடன் கொண்ட மாநிலமாக முன் நிற்கும் எனக் குற்றம்சாட்டினார்.
அவரின் பதிவில், “சித்தராமையா, தன் பெயரை ‘சாலா ராமையா’ என்று மாற்றிக் கொண்டால் நல்லது. ஊழல் நிறைந்த ஆட்சி தொடர்ந்தால் 12 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. செய்யாத தவறுக்காக கன்னடர்கள் கடன் சுமையை சுமக்க போவது உறுதி, உறுதி, உறுதி” என தெரிவித்துள்ளார்.