தேவையான பொருட்கள்:
இட்லி அரிசி 2 கப்
உளுத்தம் பருப்பு 1 கப்
பசலை கீரை 1 கப்
வெந்தயம் 1½ தேக்கரண்டி
தேவைக்கேற்ப உப்பு
செய்முறை: உளுத்தம்பருப்புடன் வெந்தயத்தை கலந்து, அரிசி மற்றும் பருப்பை தனித்தனியாக நான்கு முதல் ஐந்து மணி நேரம் ஊற வைக்கவும். இரண்டையும் தனித்தனியாக மிக்ஸியில் அரைத்து ஒரு பாத்திரத்தில் போட்டு உப்பு சேர்த்து கலக்கவும். கலந்த மாவை பத்து மணி நேரம் புளிக்க விடவும். பசலை இலைகளைக் கழுவி சுத்தம் செய்து கொதிக்கும் நீரில் மூன்று நிமிடம் ஊற வைக்கவும். பின் குளிர்ந்த நீரில் கழுவி, மிக்ஸியில் அரைத்து, இட்லி மாவுடன் கலக்கவும். ஒரு இட்லி தட்டில் நெய் தடவி, மாவை ஊற்றி இட்லி செய்யவும்.