சென்னை: பெங்களூருவில் கடும் பனிமூட்டம் காரணமாக மும்பையில் இருந்து பெங்களூரு சென்ற சரக்கு விமானம் அங்கு தரையிறங்க முடியாமல் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியது. இதேபோல், பெங்களூருவில் தரையிறங்க வேண்டிய சில விமானங்கள் திருவனந்தபுரம் மற்றும் கோவைக்கு திருப்பி அனுப்பப்பட்டன. மும்பையில் இருந்து புறப்பட்ட ப்ளூ டார்ட் சரக்கு விமானம் பெங்களூரு சென்றது.
ஆனால் பெங்களூரு விமான நிலையத்தில் கடும் பனிமூட்டம் நிலவியதால் பெங்களூரில் தரையிறங்க முடியாமல் நேற்று காலை 8 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியது. இதேபோல், புனே, கொல்கத்தா, மும்பையில் இருந்து பெங்களூரு சென்ற பயணிகள் விமானம் திருவனந்தபுரத்துக்கும், சிங்கப்பூரில் இருந்து பெங்களூரு சென்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் கோவை விமான நிலையத்துக்கும் திருப்பி அனுப்பப்பட்டது.