சென்னை : சென்னை விமான நிலையத்தில் 3.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை விமான நிலையத்திற்கு மும்பையில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில் விமான நிலையத்தில் அதிகாரிகள், சந்தேகத்திற்கிடமாக வந்த 6 பேரிடம் சோதனை நடத்தினர். அப்போது அவர்களின் உள்ளாடைகளில் 3.5 கிலோ தங்கத்தை பசை வடிவில் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை கைது செய்து ரூ.2.8 கோடி மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.