ஜல்காவ்: சர்வதேச மகளிர் தினத்தையொட்டி ஜல்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சரும், சிவசேனா கட்சியின் மூத்த தலைவருமான குலாப் ராவ் பாட்டீல் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், “பெண்களுக்கான எம்எஸ்ஆர்டிசி பஸ் கட்டணத்தை பாதியாக குறைத்துள்ளோம்.

லட்கி பாகின் திட்டம், பெண்களுக்கு இலவச கல்வி உட்பட மகளிர் மேம்பாட்டிற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பெண்கள் அதிகாரம் பற்றி பேசினாலும் இன்று மோசமான சம்பவங்கள் நடக்கின்றன. பால்தாக்கரேவின் சிந்தனைகளால் நாங்கள் ஈர்க்கப்பட்டபோது, பெண்கள் மிளகாய்ப் பொடியையும் உதட்டுச்சாயம் கொண்ட ராம்பூரி கத்தியையும் எடுத்துச் செல்ல வேண்டும் என்று கூறியதற்காக அவரைப் பத்திரிகையாளர்கள் கடுமையாக விமர்சித்தார்கள்.
ஆனால் இன்றும் அதே நிலைதான். இன்றைய இளம் பெண்களிடம் தற்காப்புக்காக இதுபோன்ற பொருட்களை எடுத்துச் செல்லச் சொல்வேன்,” என்றார்.