சென்னை: புதிய வழித்தடத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் டெண்டர் கோரியுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டமாக, ஏஜி-டிஎம்எஸ் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலான புளூ லைன் சுரங்கப்பாதை பிப்ரவரி 10, 2019 அன்று திறக்கப்பட்டு முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தது. நகரங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்பட்டது.
இதன் சேவை பெரிய நகரங்களில் மட்டுமே கிடைக்கும். கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், மின்சாரத்தைப் பயன்படுத்தி ரயில்களை இயக்கவும் இந்த ரயில் சேவை முதலில் லண்டனில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பிறகு, அமெரிக்கா, ஜப்பான், சீனா போன்ற வளர்ந்த நாடுகளுக்கும் இந்தத் திட்டம் விரிவடையத் தொடங்கியது. இந்தியாவின் நான்காவது நீளமான மெட்ரோ நெட்வொர்க்கான சென்னை மெட்ரோ இரண்டு கட்டங்களுடன் தொடங்கியது.
முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டு, இரண்டாம் கட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளது. மூன்று வழித்தடங்களில் 42 நிலையங்களைக் கொண்ட மெட்ரோ ரயில் திட்டம், இணைப்பை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், ரியல் எஸ்டேட் சந்தைக்கு புத்துயிர் அளிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (சிஎம்ஆர்சி) ஏற்கனவே இரண்டு வழித்தடங்களில் ரயில்களை இயக்கி வருகிறது.

இரண்டாம் கட்டமாக மூன்று வழித்தடங்களில் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி வழியாக கிண்டிக்கு 21 கிலோமீட்டர் புதிய பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கலங்கரை விளக்கம் முதல் உயர்நீதிமன்றம் வரையிலான புதிய வழித்தடத்தை நீட்டிப்பதற்கான திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது.