மெரினா லூப் சாலையின் இருபுறமும் இருந்த மீன்கடைகள் அகற்றம்
சென்னை: மெரினா லூப் சாலையின் இரு பக்கமும் ஏராளமான மீன் கடைகள் இயங்கி வருகின்றன. போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் இக்கடைகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன், மாநகராட்சி அதிகாரிகள் கடைகளை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டனர். கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்த மீன் வியாபாரிகள், மீன்களை சாலையில் வீசி எறிந்து அதிகாரிகளை மிரட்டினர்.