வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைப்பதில் என்ன பிரச்சனை: கேள்வி எழுப்பிய முன்னாள் அமைச்சர்
சென்னை: கொடநாடு விவகாரத்தில் தங்களுக்கு மடியில் கனமில்லை எனக் கூறிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைப்பதில் என்ன பிரச்சனை என கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது: கொடநாடு விவகாரத்தில் மு.க.ஸ்டாலினின் தூண்டுதலின் பேரில்தான் ஓ.பி.எஸ் போராட்டம் அறிவித்துள்ளார்.
விடியல் அரசு என்று கூறிவிட்டு விடியும் முன் டாஸ்மாக்கைத் திறக்க முயற்சிக்கின்றனர். எதிர்ப்பு மட்டும் தெரிவிக்கவில்லை என்றால் 7 மணிக்கே கடையை திறந்து இருப்பார்கள்.
கொடநாடு விவகாரத்தில் தங்களுக்கு மடியில் கனமில்லை எனக் கூறிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைப்பதில் என்ன பிரச்சனை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.