காரைக்கால்: காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு பிளாக்கிற்குட்பட்ட கோட்டுச்சேரியில் உள்ள அரசு வ.உ.சி பள்ளியில் போதைப்பொருள் தடுப்புக்காக முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான சந்திர பிரியங்கா வேண்டுகோளின்படி புதுச்சேரியை சேர்ந்த தனியார் அமைப்பு உதவியுடன் பள்ளி முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
நேற்று விழாவில் பங்கேற்ற சந்திர பிரியங்கா, கேமரா செயல்பாடுகளை தொடங்கி வைத்து மாணவர்கள் மத்தியில் பேசுகையில், பள்ளிப் பருவத்தில் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்… யாருக்கும் இடையூறு ஏற்படாத வகையில் வாழ்க்கையை வாழ வேண்டும்.
இதற்கு நல்ல விஷயங்களை மனதில் ஏற்றுக்கொள்ள வேண்டும். போதை பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. போதையின் பாதையில் சென்றால் வாழ்க்கையில் வெற்றி பெறுவது மிகவும் கடினமாகிவிடும் என சந்திர பிரியங்கா குறிப்பிட்டுள்ளார்.
பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும் என்று பெற்றோர்கள் நினைப்பது போல் ஆசிரியர்களுக்கும் அந்த பொறுப்பு உள்ளது. அதனால் பள்ளி வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உங்களை கண்காணிக்க வேண்டும்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் கமலின் ‘இப்போ ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது முடியாது…’ என்று கூறி அனைவரையும் உற்சாகப்படுத்தினார் சந்திர பிரியங்கா.