புதுடெல்லி: தேசிய அணை பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் அனில் ஜெயின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக மத்திய அரசால் அமைக்கப்பட்ட ஏழு பேர் கொண்ட கண்காணிப்பு குழுவின் முதல் கூட்டம் வரும் 22-ம் தேதி நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழக மற்றும் கேரள அதிகாரிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழகம் தரப்பில் கண்காணிப்பு குழுவில் இடம் பெற்றுள்ள நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் மங்கத் ராம் சர்மா, காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்ரமணியன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். கேரளா சார்பில் மாநில நீர்வளத்துறை செயலர் மற்றும் தலைமை பொறியாளர் ஆகியோர் பங்கேற்பார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.