பார்படோஸ் நாட்டு சரக்கு கப்பலில் இருந்த 21 ஊழியர்கள் மீட்பு
ஏடன்: இந்திய கடற்படை மீட்டது… ஏடன் வளைகுடா கடல் பகுதியில் ட்ரோன் தாக்குதலில் தீப்பிடித்த பார்படோஸ் நாட்டு சரக்குக் கப்பலில் இருந்த ஒரு இந்தியர் உள்ளிட்ட 21 ஊழியர்களை இந்திய கடற்படையைச் சேர்ந்த ஐ.என்.எஸ். கொல்கத்தா போர்க் கப்பல் மீட்டுள்ளது. பார்படோஸ் கப்பலில் இருந்து வெளியேறி கடலில் தத்தளித்த ஊழியர்களை ஹெலிகாப்டர் மற்றும் படகுகள் மூலம் மீட்டுள்ளது.