217 முறை கொரோனா தடுப்பூசி… நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படவில்லை
ஜெர்மனி: ஜெர்மனியில், 217 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக கூறிய நபரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படவில்லை என தெரிவித்தனர். அதிக முறை தடுப்பூசி செலுத்திக்கொண்டால் எவ்விதமான பாதிப்புகள் ஏற்படும் என அறிவியல் பூர்வமாக எவ்வித ஆய்வும் தெரிவிக்காத நிலையில், உடலின் நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படும் என ஒரு சில விஞ்ஞானிகள் மட்டும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.