3 பெண்களை ஏற்றி பைக்கில் விதிமுறைகளை மீறிய நபர்
சென்னை: சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவிவரும் வீடியோவில் போக்குவரத்து விதிமீறல்களை பற்றி சிறிதும் கவலைப்படாமல், பாதுகாப்பற்ற முறையில் 3 பெண்களை ஏற்றிக்கொண்டு ஒருவர் பைக்கில் ஆபத்தான முறையில் பயணித்துள்ளார்.
அதுவும் முன்னாடி அமர்ந்திருந்த பெண் உட்கார்ந்திருந்த விதத்தை பார்த்து நெட்டிசன்கள் பலர் வாயடைத்து போயுள்ளனர். விபத்துக்கு காரணம் இதுபோல் அதிகம் பேர் செல்வது தான். ஏதேனும் வேகத்தடை அல்லது பிரேக் போட வேண்டிய நிலை, வாகனம் திடீரென குறுக்கே வரும் போது விபத்தில் சிக்க அதிக வாய்ப்பு உள்ளது. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அதிகரித்து வருகிறது.