கரும்பு சாகுபடியை மேம்படுத்த ரூ.20.43 கோடி நிதி ஒதுக்கீடு
சென்னை: கரும்பு சாகுபடியை மேம்படுத்த ரூ.20.43 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய அவர் கூறுகையில், சர்க்கரைத் தொழில் விவசாயிகளின் பொருளாதார வளர்ச்சியிலும் கிராமப்புற மேம்பாட்டிலும் பெரும்பங்கு வகிக்கும் முக்கிய வேளாண் சார்ந்த தொழிலாகும் என்று தெரிவித்தார்.