2 கோடி உறுப்பினர்கள் சேர்க்கணும்… புஸ்ஸி ஆனந்த் உத்தரவு
சென்னை: மாநிலம் முழுதும் இரண்டு கோடி உறுப்பினர்களை சேர்ப்பதற்கான பணிகளை துவங்க வேண்டும்,” என, தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த் உத்தரவிட்டுள்ளார். கட்சிக்கு புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது குறித்த, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், சென்னையை அடுத்த பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக தலைமை அலுவலகத்தில் நடந்தது. இதில் மேற்கண்டவாறு அவர் தெரிவித்துள்ளார்.