மானிய விலையில் விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள்
சென்னை: தமிழக விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் வழங்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 25 லட்சம் விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீடு வழங்கப்பட்டுள்ளது. மழையால் பாதித்த தென்மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.208.20 கோடி நிவாரணத்தொகை வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.