பார்க்கிங் பிரச்சனையில் கொலை மிரட்டல் விடுத்ததாக நடிகை சரண்யா மீது புகார்
சென்னை : சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த ஸ்ரீதேவி என்பவர் தன் பக்கத்து வீட்டு வசிக்கும் நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது கார் பார்க்கிங் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் கொலை மிரட்டல் விடுத்ததாக சிசிடிவி ஆதாரங்களுடன் போலீசில் புகார் செய்துள்ளார். எந்த சர்ச்சையிலும் சிக்காத சரண்யா பொன்வண்ணன் மீது இவ்வாறு கொலை மிரட்டல் புகார் செய்யப்பட்டுள்ளது கோலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.