நாட்டு மக்களை பற்றி கவலைப்படாத காங்கிரஸ்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு
சிலிகுரி: காங்கிரஸ் மற்றும் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் நாட்டையும் நாட்டு மக்களையும் பற்றிக் கவலைப்படாமல் தங்களது உறவினர்களையும், ரத்த சொந்தங்களையும் காப்பாற்றவே அதிக அக்கறை எடுத்துக்கொள்வதாக பிரதமர் மோடி தெரிவித்தார். மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் 4500 கோடி ரூபாய் மதிப்புள்ள உள்கட்டமைப் திட்டங்களை அவர் தொடங்கிவைத்துப் பேசினார்.