கொரோனா தடுப்பூசியால் மரணம்; இங்கிலாந்தில் அதிர்ச்சி
இங்கிலாந்து: இங்கிலாந்தைச் சேர்ந்த தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான, அஸ்ட்ராஜெனெகா தனது கொரோனா தடுப்பூசி பக்கவிளைவை ஏற்படுத்தும் என்று ஒப்புக்கொண்டுள்ளது. இந்நிறுவனம் உருவாக்கிய கோவிஷீல்ட், ரத்த உறைவு, ரத்த வெள்ளை அணுக்கள் குறைவு, ஒரு சில நேரங்களில் மரணம் போன்றவை ஏற்படும் என்பதை லண்டன் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளது.கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு எதிராக இங்கிலாந்தில் 51 வழக்குகள் நடைபெற்று வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.