வேலூர் கலெக்டர் அலுவலத்தில் தீ விபத்து
வேலூர்: வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மின் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. இன்று காலை ஊழியர் சந்தோஷ் என்பவர் எலக்ட்ரிக் பணியில் ஈடுபட்ட போது ஒயர்கள் திடீரென உரசி தீப்பற்றியது. சந்தோஷ் மீதும் தீ பற்றியது. அந்த நேரத்தில் பயங்கர சத்தத்துடன் கலெக்டர் அலுவலகம் முழுவதும் மின்தடை ஏற்பட்டது. மின் ஊழியர் மீது பற்றி எரிந்த தீயை சக ஊழியர்கள் அணைத்தனர்.