திருச்சியில் பிரபல நடிகையின் காரை சோதனை செய்த பறக்கும் படையினர்
திருச்சி: திருச்சியில் நடிகை மஞ்சுவாரியார் காரில் பறக்கும்படையினர் சோதனை நடத்தினர். திருச்சி மாநகர், புறநகர் மற்றும் தேசிய நெடுஞ்சாலை பகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகை மஞ்சுவாரியார் காரிலும் சோதனை நடத்தப்பட்டது. ஒருபக்கம் சோதனை நடந்த நிலையில், மறுபக்கம் மஞ்சு வாரியரிடம் ரசிகர்கள் ஆர்வமுடன் செல்பி எடுத்தனர்.