தேர்தலுக்காக ஆசிரியர்கள் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்கிறார்
தருமபுரி: தருமபுரி தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயாவை ஆதரித்து குமாரசாமி பேட்டையில் சீமான் பிரசாரம் செய்தார். அப்போது அவர், ஆசிரியர்கள் போராடிய போது கண்டு கொள்ளாத முதலமைச்சர், இப்போது தேர்தல் வருவதால், அவர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று சொல்வதாகவும் விமர்சனம் செய்தார். மேலும் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க உழைத்த மு.க. ஸ்டாலின் தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் கிடைக்க முயலாதது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.