பொலிவியாவில் கனமழையால் வெள்ளம்
பொலிவியா: தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் பெய்த கனமழையால் ஹய்லனி ஆற்றின் கரையை தாண்டி பாய்ந்த வெள்ளம், லா பாஸ் நகரின் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. வீடுகளுக்குள் புகுந்த சேறு கலந்த நீரை அகற்றும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டனர். வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் இருந்து பொருட்களை மக்கள் எடுத்துக் கொண்டு வெளியேறினர்.