இன்று கன மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் எச்சரிக்கை
சென்னை: தமிழ்நாட்டில் கத்தரி வெயில் கொளுத்தி வருகிறது. உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசுவதால் வானிலை ஆய்வு மையம் ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் காற்றின் திசை மாறுபாடு காரணமாக கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. இன்று நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.