டெல்லியில் மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை
புதுடில்லி: டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை மந்திரி அதிதி பார்வையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர் மழையால் டெல்லியில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டார்.