வேறு திட்டத்தை சுட்டிக்காட்டி வாக்கு கேட்காதது ஏன்? சீமான் கேள்வி
திருப்பூர்: 3 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்டு வரும் தி.மு.க ஆயிரம் ரூபாய் கொடுப்பதை தவிர வேறு திட்டத்தை சுட்டிக்காட்டி வாக்கு கேட்காதது ஏன்? என சீமான் கேள்வி எழுப்பினார். திருப்பூர் நா.த.க வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து அந்தியூரில் பரப்புரை மேற்கொண்ட அவர் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார்.