தலைமை தேர்தல் ஆணையருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு
புதுடில்லி: தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமாருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் வரும் 19ம் தேதி நடக்க உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமாருக்கு உள்துறை அமைச்சகம் இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது.