வன விலங்குகள் உலா… காட்டுக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர்
நீலகிரி: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் கெத்தை மலைப்பாதையில் பகல் நேரங்களில் உலா வரும் காட்டு யானைக் கூட்டத்தை ஒலிபெருக்கி பயன்படுத்தி வனப்பகுதியில் விரட்டும் பணியில் வனத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். மலைப்பாதையில் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் உலா வருவதைக் கண்டால் தகவல் தர கேட்டுக்கொண்டுள்ளனர்.