வந்தால் வரவேற்பு… வராவிட்டால் கவலையில்லை: முன்னாள் அமைச்சர் சொல்கிறார்
சென்னை: வந்தாலும் சரி… வராவிட்டாலும் சரி… கத்தரிக்காய் முற்றினால் கடைக்கு வந்துதான் ஆக வேண்டும் என்று கூறிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி தங்களது கூட்டணிக்கு வந்தால் வரவேற்போம், வராவிட்டாலும் கவலையில்லை என்று தெரிவித்தார். சென்னை ராயபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், யாரையும் நம்பி அதிமுக இல்லை என்று கூறினார்.