அமெரிக்காவில் தவித்த குழந்தையை சட்ட போராட்டம் நடத்தி மீட்ட தமிழக அரசு
சென்னை : அமெரிக்காவில் பெற்றோரை இழந்து தவித்த தமிழகத்தை சேர்ந்த 17 மாத குழந்தையை சட்டப் போராட்டத்திற்கு பின்னர் தமிழக அரசு மீட்டு உள்ளது. முறைகேடாக பஞ்சாப் தம்பதிக்கு தத்து கொடுக்கப்பட்ட நிலையில் கடும் சட்டப் போராட்டத்திற்கு பின் தமிழக அரசின் முயற்சியால் குழந்தை மீட்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.