ரயில்களில் தண்ணீர் இல்லை… கடும் அவதிக்குள்ளான பயணிகள்
சென்னை: தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது தெற்கு ரயில்வே. விரைவு ரயில்கள் புறப்பட்ட சில மணி நேரங்களில் ரயில்களில் தண்ணீரில்லாமல் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். சென்னை மற்றும் கோவையிலிருந்து இயக்கப்பட்ட சில இன்டர்சிட்டி மற்றும் நீண்ட தொலைவு விரைவு ரயில்கள் புறப்பட்ட சில மணி நேரங்களில் தண்ணீர் இல்லாமல் போனதால், பயணிகள் கடும் துயரத்தை அடைந்தனர்.